கடவுளை அடையும் அல்லது தரிசிக்கும் நிலைக்குச் செல்ல உதவுகின்ற வழி முறைகளுக்கு யோகம் என்று பெயர். யோகத்திலே நான்கு வகை இருப்பதாக சுவாமி சித்பவானந்தர் விளக்கியிருக்கிறார். பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் மற்றும் இராஜ யோகம். பக்தி யோகம் என்பது அன்றாடம் எளிதாக தத்தம் மதத்தின்பாலான வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று .இறைவனை வழிபடும் முறையாக இறைவனைத் தரிசிக்கும் யோகத்தை பக்தி யோகம் என்றழைக்கிறார்கள். இவ்வுலகத்தில் உள்ள அறுதிப் பெரும்பான்மையோருக்கு எளிதாக எடுத்தாளப்படக்கூடிய யோகமாக இது இருப்பதினால் மத சம்பந்தமான கோயில்களும் மதகுருமார்களும் அவரவர் சமயங்களும் தோன்றியிருக்கின்றன. கர்ம யோகம் என்பது காரியங்களைச் செய்வதன் மூலம் இறைவனிடம் நெருங்குவது. தர்ம காரியம், அன்ன தானம், மற்றும் இன்னபிற தானச் செயல்களைச் செய்வதன் மூலம் இறைவனை நெருங்கிச் செல்வது கர்ம யோகமாகும். ஞான யோகம் என்பது கற்ற றிதல் மூலமும் கற்று அறிந்த பெரியவர்களிடம் சீடர்களாக .இருந்து கடவுளை அடையும் வழிமுறைகளை அறிவது ஞான யோகம் ஆகும். இதற்கு அப்பாற்பட்டு, பக்தி வழியன்றி, கர்ம வழியன்றி, ஞான வழியன்றி தனக்குள் தானே உள் சென்று கட உள் கடவுளைக் காணுவது இராஜயோக வழியாகும்.
அந்த எட்டு வகையான யோகங்கள் யாவை?
1. யமம்
2. நியமம்
3. ஆசனம்
4. பிராணாயமம்
5. பிரத்தியாஹாரம்
6. தாரணை
7. தியானம்
8. சமாதி
இவை ஒவ்வொன்றும் ஒரு யோக நிலை. யமம் முதல் சமாதி வரை அத்தனை யோக நிலைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அடைவது இதற்கான வழி முறை. அதே சமயம் ஒவ்வொரு யோக நிலையின் மூலமும் நேரடியாக சமாதி என்கிற உன்னத நிலையை அடைய முடியும். ஆனால் அதற்கான காலநிலை அனுஷ்டிக்கும் மானுடரின் தீவிரத்தைப் பொறுத்து அவர்தம் வாழ்நாளிலோ அல்லது முன்பாகவோ அடையப் பெறுகின்றனர். இனி ஒவ்வொரு யோக நிலையைப் பற்றியும் சற்று விளக்கமாகக் கண்ணுறலாம். யமம் மற்றும் நியமம் மனிதனின் இயற்பாங்குகளுக்குள் உட்பட்டதாகும், மனிதருள் ராட்சஸ, மனித மற்றும் தேவ கணங்கள் உள்ளதாக வான சாஸ்திரங்கள் கூறுகின்றன. குறிப்பிட்ட வான சாஸ்திர நிலைப்பாட்டு நேரத்தில் பிறந்தவர்கள் குறிப்பிட்ட கணத்தை அதாவது அந்தக் கணத்திற்குறிய குணாதிசயங்களை மேலோங்கக் கொண்டிருப்பர் என்பதாக வான சாஸ்திரங்கள் வரையறுக்கின்றன. யமம் மற்றும் நியமம் தேவ கணத்தைக் குணாதிசயமாகக் கொண்டோருக்கு எளிதாகக் கைக்கொள்ளக் கூடிய குணங்களாகும், யமம் என்பது ஐந்து வகையான குணங்களைக் கொண்டதாகும்.
1. அஹிம்ஸை
2. சத்யம்
3. அஸ்தேயம்
4. பிரம்மச்சரியம்
5. அபரிக்ரஹம்