Saturday, September 8, 2007

படித்ததில் மனதில் நிலைத்தது - 1

அல்லயன்ஸ் பப்ளிஷாரால் வெளியிடப்பட்ட மஹாபாரதம் பேசுகிறது என்ற சோ எழுதிய புத்தகத்தை விலைக்கு வாங்கிப் படித்துக் கொண்டிருக்கிறேன். இருபாகங்களாக வெளிவந்திருக்கும் இப்புத்தகங்களில் இருந்து என் மனதில் நிலைத்த சில வரிகளை இப் பதிவுகளில் தொடர்ந்து பதிவுசெய்ய இருக்கிறேன்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நல்ல மனிதர்களுக்குப் பொறுமைதான் பலம். மற்றவர்கள் எவ்வளவு நிந்தித்தாலும் எவன் அதைப் பொறுத்துக்கொள்கிறானோ அவன் இவ்வுலகத்தையே வென்றவன். கோபத்தை அடக்குகின்றவன், மற்றவர்களுடைய நிந்தனையைப் பொறுப்பவன், பிறர் தன்னை வருத்தியும் அவர்களை வருத்தாமல் இருப்பவன் உயர்ந்தவனாகிறான். நூறு வருட காலம் தொடர்ந்து யாகம் செய்பவனை விட, பொறுமையுடன் இருப்பவன் மேலானவன். கோபம் இழிவானது. கோபக்காரனை விட்டும் மனைவி, மகன், வேலையாள், சகோதரன், நண்பன் ஆகியோர் விலகி விடுவார்கள். தர்மமும், சத்தியமும் அவனை விட்டுப் போகும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Courtesy: அல்லயன்ஸ் பப்ளிஷார்ஸ்

No comments: